நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

Siva
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (07:50 IST)
சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் பணிகள் காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 27 முதல் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும் நிலையில், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாற்று இடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளன. 
 
தடம் எண். 21, 41D, S17, 49K மற்றும் S5 ஆகியவை மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கும், தடம் எண். 49F பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், தடம் எண். 12M மற்றும் 5B ஆகியவை லஸ் கார்னர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. 
 
மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் முதியவர்களுக்கான இலவசப் பயண டோக்கன்களைப் பெற விரும்புவோர் இனி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லலாம். 
 
இந்த மாற்றம் குறித்த விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி தமிழக போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments