Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபர் கைது

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (17:17 IST)
புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்மக்குடி தாலுகாவில் உள்ள வாணக்கன்காடு  என்ற ஊராட்சி பகுதியில், சமீபத்தில், பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில்,60  நிமிடத்தில் ஒரு நபர் பத்து பீர் குடிக்க வேண்டும் என்றும் சைடிஷ் ஆக மீன் வருவல் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, நுழைவு கட்டணம் 1000 ரூபாய் எனவும்,  36 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இப்போட்டியில், முதல் பரிசு 5000 ரூபாய் என்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பீர் குடிக்கும் போட்டி பற்றி போஸ்டரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணேசமூர்த்தி என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments