Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லாத சொத்து… ஆட்டய போட பிளான் – வசமாக சிக்கிய நபர்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (11:59 IST)
கன்னியாகுமரியில் 80 வயது மூதாட்டியை சொத்துக்காக அவரது வீட்டிலேயே பூட்டிவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த கமலாபாயின் மகள் விமலா சாந்தா. கமலா பாய்க்கு 82 வயது ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா சாந்தா உயிரிழந்துவிட, அவருடன் கல் குவாரியில் வேலை பார்த்த யுகேந்திரன் என்பவர் கமலா பாயை பார்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பெயரில் லட்சக் கணக்கில் சொத்து இருப்பதை அறிந்த யுகேந்திரன் கமலா பாயை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டைப் பூட்டி வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் கொடுத்துள்ளார்.

இந்த கொடுமை அந்த தொகுதி எம் எல் ஏ மனோதங்கராஜ் மூலமாக காவல்துறை காதுகளுக்கு செல்ல, போலிஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி பூட்டிய வீட்டின் ஓரத்தில் கிடந்துள்ளார். அதன் பின்னர் யுகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், தான் தான் மூதாட்டியை கவனித்துக் கொண்டதாக சொல்லியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கும் முனைப்புகளில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments