Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

Siva
புதன், 5 மார்ச் 2025 (18:46 IST)
பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12:30 முதல் 2 மணி வரை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு  செல்லும் நான்கு ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு - கடற்கரை இடையே செல்லும் ஐந்து ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை பயணிகள் கருத்தில் கொண்டு, தங்களுடைய பயணத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமியிடம் 50 லட்ச ரூபாய் மோசடி.. மார்பிங் செய்து மிரட்டிய நண்பனின் சகோதரர்..

எந்த போராக இருந்தாலும் அமெரிக்காவுடன் மோத தயார்: சீனா அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் தியானம் செய்ய வந்த கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

கோவில் நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments