பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12:30 முதல் 2 மணி வரை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் நான்கு ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு - கடற்கரை இடையே செல்லும் ஐந்து ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பயணிகள் கருத்தில் கொண்டு, தங்களுடைய பயணத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.