Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட சென்ற கோவிலில் சிக்கல்; பல மணி நேரமாக போராடிய திருடன்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:00 IST)
மதுரையில் கோவில் ஒன்றிற்குள் புகுந்த திருடன் கதவை திறக்க முடியாமல் பல மணி நேரமாக போராடி கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது பேச்சியம்மன் கோவில். நேற்று இந்த கோவிலில் உள்ள மூன்று ஐம்பொன் சிலைகளும், குத்து விளக்கும் திருடு போனதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது நேற்று முன் தினம் ஆசாமி ஒருவன் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் திருட வந்தது தெரிய வந்துள்ளது.

திருடுவதற்காக உள்ளே நுழைந்த திருடன் கதவை உடைக்க முயன்றிருக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் திறக்க முடியாததால் சோர்ந்து போன திருடன் அங்கேயே பல மணி நேரம் அமர்ந்தும், சுற்றி வந்தும் இருக்கிறான். பிறகு நீண்ட முயற்சிக்கு பிறகு பக்கவாட்டு கதவை உடைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

திருடப்பட்ட சிலைகள் மற்றும் குத்துவிளக்கின் மதிப்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் திருடி சென்றவரை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments