Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட சென்ற கோவிலில் சிக்கல்; பல மணி நேரமாக போராடிய திருடன்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:00 IST)
மதுரையில் கோவில் ஒன்றிற்குள் புகுந்த திருடன் கதவை திறக்க முடியாமல் பல மணி நேரமாக போராடி கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது பேச்சியம்மன் கோவில். நேற்று இந்த கோவிலில் உள்ள மூன்று ஐம்பொன் சிலைகளும், குத்து விளக்கும் திருடு போனதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது நேற்று முன் தினம் ஆசாமி ஒருவன் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் திருட வந்தது தெரிய வந்துள்ளது.

திருடுவதற்காக உள்ளே நுழைந்த திருடன் கதவை உடைக்க முயன்றிருக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் திறக்க முடியாததால் சோர்ந்து போன திருடன் அங்கேயே பல மணி நேரம் அமர்ந்தும், சுற்றி வந்தும் இருக்கிறான். பிறகு நீண்ட முயற்சிக்கு பிறகு பக்கவாட்டு கதவை உடைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

திருடப்பட்ட சிலைகள் மற்றும் குத்துவிளக்கின் மதிப்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் திருடி சென்றவரை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments