Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை என்கவுண்ட்டரில் ரவுடிகள் சுட்டுக் கொலை

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (16:59 IST)
மதுரை காவல்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 
மதுரை சிக்கந்தர்சாவடியில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் என்பவர்களை, மதுரை மாநகர் தனிப்படை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ரவுடிகள் ஓடியதால் சுட்டு கொல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.

மதுரையில் அதிக அளவில் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட ரவுடிகளை கைது செய்ய சென்றபோது, தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது காவல் துறையினர் தங்களை தற்காத்து கொள்ள சுப்பாக்கி சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிந்துள்ளனர். முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments