Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாதவர்களை கைது செய்யலாமே? – உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (18:08 IST)
கொரோனா ஊரடங்கை மீறி மாஸ்க் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் பொதுவெளிகளில் நடமாடவும், கடைகள் திறக்கவும் அனுமதி அளித்திருந்தாலும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியுள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பலர் முன்னெச்சரிக்கையின்றி மாஸ்க் அணியாமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை “கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தினால் என்ன?” என்று கூறியுள்ளது. மேலும் “மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றாதது போன்ற செயல்களுக்கு கைது நடவடிக்கை எடுத்தால் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments