Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் ராமர் கோவில், மதுரையில் ரத யாத்திரை! – நீதிமன்றம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:41 IST)
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பல பகுதிகளிலிருந்து பலர் அதற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்துமத அமைப்புகள் சிலவும் மக்களிடம் நன்கொடை வசூல் செய்து ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்தவும், அதேசமயம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments