Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் ? நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (18:21 IST)
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய எவ்வளவு நாள் ஆகும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஒன்றான ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சமூக நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விளையாட்டால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர்கதையாக உள்ளது . இதனால் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து இது சம்மந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழக அரசு இந்த விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் ‘இந்த விளையாட்டுகள் பல உயிர்கள் பலியாகின்றன. பிரபலங்களே இதற்கு விளம்பரம் செய்கின்றனர். ஆகவே விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை தட செய்ய அல்லது அதற்கான சட்டம் இயற்றுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments