Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க சான்றிதழ் பெற வேண்டும்: அதிரடி உத்தரவு..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (10:28 IST)
மதுரை சித்திரை திருவிழாவில் நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க உணவுப்பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் சென்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி அல்லது பதிவுச் சீட்டு சான்றிதழை பெற வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதங்கள் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலையில்  அவர்களுக்கு தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் அன்னதான உணவு கூடங்கள் அமைக்கப்படும். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு மோர் பந்தல் அன்னதான கூடங்கள் அமைக்க கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments