Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் குறித்த அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (19:37 IST)
சென்னையில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி அவர்கள் சற்று முன் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அவர்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளார் 
 
இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் அசெளகரித்தை முன்னிட்டே இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது 
 
ஏற்கனவே மின்சாரத்துறை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்டிருந்த கேங்மேன் நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments