Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (12:01 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் முன் 18 எம்.எல்.ஏக்கள் ஆஜராகாததால் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.



 
 
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடரந்தது.
 
இன்றைய விசாரணையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி ரவிச்சந்திரபாபு செய்துள்ளார். எனவே இனிமேல் இந்த 5 வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments