Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எதிர்பார்த்ததை விட கனமழையா?

Mahendran
செவ்வாய், 12 நவம்பர் 2024 (14:57 IST)
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்யும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தென்மேற்கு வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மட்டும் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
இதனால் சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். 
 
நவம்பர் 17 கன மழை எச்சரிக்கையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தில் கன மழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள துறைகளையும் தயார் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments