பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (07:15 IST)
பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

பெரியார் சிலை மீது லாரி மோதியதில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை அவமதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று திடீரென விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மோதியது
 
இதன் காரணமாக பெரியார் சிலை பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியார் சிலை மீது லாரியை மோதிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதி வேலையா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments