Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்..

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (10:25 IST)
டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் 6 ஆம் தேதி தொடங்கும் எனவும், ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 13 கடைசி நாள் எனவும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 18 கடைசி நாள் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments