Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் புதிய தேதிகள் அறிவிப்பு…

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (17:02 IST)
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செயப்பட்ட பின்பே தேர்தல் நடத்தவேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதனை தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடக்கும் என அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இதற்கு முந்திய தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் டிசம்பர் 27,  30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், மனுதாக்கல் டிசம்பர் 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

வேட்பு மனு ஆய்வு டிசம்பர் 17 ஆம் தேதியும், வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments