Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாட்சி தேர்தல் புதிய தேதிகள் அறிவிப்பு…

உள்ளாட்சி தேர்தல் புதிய தேதிகள் அறிவிப்பு…

Arun Prasath

, சனி, 7 டிசம்பர் 2019 (17:02 IST)
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செயப்பட்ட பின்பே தேர்தல் நடத்தவேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதனை தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடக்கும் என அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இதற்கு முந்திய தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் டிசம்பர் 27,  30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், மனுதாக்கல் டிசம்பர் 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

வேட்பு மனு ஆய்வு டிசம்பர் 17 ஆம் தேதியும், வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மன உறுதியை குலைக்க இப்படி செய்தார்கள் - ப. சிதம்பரம்