Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம்- முதல்வர் முக.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (21:56 IST)
தமிழ்நாட்டின் பெருமையை உணராதவர்களுக்கு உணர்த்தி, அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முதல்வர் முக.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு அடித்தளம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள். அத்தகைய கட்டமைப்பை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, நகரத்தில் வாழும் எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைத்தேன்.

கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் மிகச்சிறந்த மாநிலமாக விளங்கி, தலைநிமிர்ந்து நிற்கும் நமது தமிழ்நாட்டின் பெருமையை உணராதவர்களுக்கு உணர்த்தி, அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments