Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு

Webdunia
திங்கள், 23 மே 2016 (11:01 IST)
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் மே 18 அன்று அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தென்னிலை பகுதியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர் உலகநாதன் கொடுத்த புகாரின்படி, தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments