Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை: பொறியியல் மாணவர் கைது

Advertiesment
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை: பொறியியல் மாணவர் கைது
, வெள்ளி, 15 ஜூலை 2016 (02:11 IST)
காதலன் திட்டியதால் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 

அந்தமானை சேர்ந்தவர் சதாசித்தி. இவரது மகள் கார்த்திகா சித்தி (22) திருவேற்காடு வேலப்பன் சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அவர், கடந்த 11-ந்தேதி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் கார்த்திகாவின் செல்போனுக்கு அந்தமானை சேர்ந்த நிஷாந்த் (23) என்பவர் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. இவர் தாம்பரம் சேலையூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், கார்த்திகா சித்தியும் பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்து உள்ளனர். இருவரும் சென்னையில் படித்த போதும் நட்பு தொடர்ந்தது. அடிக்கடி செல்போனில் பேசி உள்ளனர். இந்நிலையில், கார்த்திகா உடன் பள்ளியில் படித்த வாசிம் அலி என்பவரும் கார்த்திகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷியத்தை, நிஷாந்திடம் கார்த்திக்கா கூறியுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டதில் கார்த்திகா சித்தியை நிஷாந்த் திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நிஷாந்தை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கிறார்கள்.
 


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமராஜர் உருவத்தில் 114 கிலோ ராட்சத கொழுக்கட்டை