மரணத்துக்குப் பின் என்ன?... அம்மாவுக்கு கடைசி கடிதம்… சட்டக்காலூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (15:26 IST)
சென்னை தரமணியில் படித்துவந்த சல்மான் என்ற 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த 19 வயதான சல்மான் என்ற சட்டக்கல்லூரி மாணவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பியுள்ளார்.  இந்நிலையில் கல்லூரிக்கு அருகே தான் தங்கி இருந்த விடுதியில் தான் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியில் சென்று திரும்பிய போது சல்மான் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் சல்மானின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சல்மானின் அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் “மரணத்துக்குப் பின்னர் என்ன நடக்கும் என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அம்மாவுக்காக 5000 ரூபாய் சேமித்து வைத்துள்ளேன்” என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாணவரின் இந்த தற்கொலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments