Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பெண் சடலம் மீட்பு....

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (18:05 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் இறந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கிண்டியில் உள்ள ஐஐடி வளாகம், அதிகம் பாதுகாப்புள்ள பகுதியாகும். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு,  அங்குள்ள பிரம்மபுத்ரா மானவர் விடுதி பின்புறம், 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 
 
அந்த பெண் யார்? அவர் எப்படி அங்கு வந்தார்? என்பது பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவரின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து போலீசார் அவரை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
அதிக பாதுகாப்புள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments