Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சிக்கு அவகாசம் குடுங்க.. நிச்சயம் நல்லாட்சி தருவாங்க! – கே.எஸ்.அழகிரி உறுதி!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (10:48 IST)
திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுனர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் ஆளுனர் அறிவிப்புகள் திருப்தி அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “வரியை எதில் குறைப்பது, எதில் அதிகரிப்பது, மாநில அரசின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பவற்றை ஆலோசிக்கதான் ரகுராம் ராஜன் போன்ற மிக சிறந்த பொருளாதார ஆலோசகர்களின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக திமுக தமிழகத்தில் நல்லாட்சி வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments