Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (09:35 IST)
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக – கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வெளியாக இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments