Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

கடைய சாத்தியாச்சு நடைய கட்டு: சசிகலாவை துறத்தும் அதிமுக!

Advertiesment
கே.பி முனுசாமி
, திங்கள், 2 மார்ச் 2020 (16:54 IST)
சசிகலா சட்டத்தின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு குறைவு என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.    
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது.   
 
ஆனால், கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.  எனவே இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுகளில் சசிகலா வெளியே வருவார் என தெரிகிறது. 
 
சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் இணைந்து செயல்படுவார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, சசிகலா சட்டத்தின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு குறைவு. சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் ஒரு போதும் அவருக்கு வாய்ப்பு இல்லை. முழுவதுமாக கடை சாத்தப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல்!