Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுமியை காஷ்மீருக்கு கடத்திய கோவை இளைஞர்.. விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை..!

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (10:23 IST)
கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி அவரை காஷ்மீருக்கு கடத்திச் சென்ற நிலையில் கோவை காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இளைஞரை கைது செய்து சிறுமியையும் மீட்டுள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 13ஆம் தேதி மாயமானார் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் அயாஸ் என்பவரும் மாயமாக இருந்தார் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து சிறுமியை அயாஸ் என்ற அந்த இளைஞர் கடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் அயாஸ் செல்போனை டிராக் செய்தபோது அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக கோவை போலீசார் ஸ்ரீநகர் சென்றனர். அங்கு 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த அயாஸை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட 17 வயது சிறுமி தற்போது சிறுவர் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments