அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (18:37 IST)
அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து இருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியில் கடந்த சில மாதங்களாக இருந்தவர் கோவை செல்வராஜ் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்றும் விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
திராவிட பாரம்பரியத்தில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருமே என் அம்மாவின் உயிரை காப்பாற்ற தவறிய துரோகிகள் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் அடுத்த கட்டமாக எந்த கட்சியில் இணைவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.O இல்லை.. பூஜ்யம்தான்!. எடப்பாடி பழனிச்சாமி ராக்ஸ்!..

திருமணமான பெண்ணை மறுதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால் அது குற்றமல்ல: உச்சநீதிமன்றம்

25,000 ரூபாய் வரை இழப்பீடு தருகிறது இந்திய ரிசர்வ் வங்கி.. யார் யாருக்கு கிடைக்கும்?

சிறுமிகள் திடீர் திடீரென காணாமல் போவதாக பெய்டு விளம்பரங்கள்? வதந்தி பரப்புபவர்களின் நோக்கம் என்ன?

நாடு முழுவதும் பாரத் டாக்ஸி!.. ஓட்டுனர்களுக்கு ஜீரோ கமிஷன்!.. அமித்ஷா அறிவிப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments