Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் எக்கச்சக்கம்.. செவிலியர்கள் குறைவு! – கோவை மருத்துவ கல்லூரியில் போராட்டம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:54 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் கோவை மருத்துவ கல்லூரியில் கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதற்கேற்ற அளவு செவிலியர்கள் இல்லை என்பதால் தற்போது பணிபுரியும் செவிலியர்களுக்கு பணிச்சுமை கூடுதலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments