Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுரத்தில் மண்டியிட்டு கதறி அழுத கே.என்.நேரு: என்னவா இருக்கும்??

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:51 IST)
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு.
 
தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இதுவரை இருந்த டி.ஆர்.பாலு தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் டி.ஆர்.பாலு வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
தற்போது திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் கே.என்.நேரு இருபப்தால் திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வேறொருவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. 
 
இந்நிலையில் இன்று தனது நண்பர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு. ஆனால், கே.என்.நேருவின் கண்ணீருக்கான காரணம் என்னவென்றுதான் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments