Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வீட்டில் கல் எறிய சொன்னதே ஸ்டாலின்தான்! – குஷ்பூ பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:32 IST)
தான் திமுகவில் இருந்தபோது தன் வீட்டில் கல் எறிந்தவர்கள் ஸ்டாலின் சொல்லிதான் எறிந்தார்கள் என குஷ்பூ பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வாறாக கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குஷ்பூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”நான் இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் குங்குமம் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். மதம் பெரியது கிடையாது. ஆனால் ஒரு மதத்தை மட்டும் அவதூறாக பேசுவது தவறு. நான் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக அவர் பேசட்டும். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி கிடையாது” என பேசியுள்ளார்.

மேலும் “நான் திமுகவில் இருந்தபோது மர்ம நபர்கள் என் வீட்டில் கல் எறிந்தார்கள். இதுகுறித்து தெரிவிக்க நான் ஸ்டாலினை சந்திக்க முயன்றபோது எனக்கு அனுமதி தரவில்லை. பின்னர் ஸ்டாலின்தான் கல் எறிய சொன்னார் என்பது எனக்கு பின்னர் தெரிந்தது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments