Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசின் விருந்தினர் மாளிகை மீது கல்வீச்சு: சென்னையில் பதட்டம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (07:22 IST)
சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததால் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதட்டம் காரணமாக தமிழக பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகை மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் விருந்தினர் மாளிகையின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. விருந்தினர் மாளிகையின் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருந்தினர் மாளிகையிலும் அதன் அருகில் உள்ள கட்டிடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments