Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா? வைரமுத்துவுக்கு கஸ்தூரி கண்டனம்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (09:18 IST)
வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் சின்மயி விவகாரம் குறித்து ஒருசில தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நேஷனல் ஊடகங்கள் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.

அதேபோல் ஒருசில திரையுலகினர்களை தவிர வைரமுத்து விவகாரம் குறித்து மற்ற நடிகர், நடிகையர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். இருப்பினும் இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, வரலட்சுமி, சித்தார்த், ஜிப்ரான் உள்பட பலர் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம் அளிக்கும் வரை இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்த நடிகை கஸ்தூரி, நேற்று அவர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்த நிலையில் இந்த விளக்கத்திற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ? சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்