Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்நிலையில் முன்னேற்றம் : சக்கர நாற்காலியில் அமர்ந்த கருணாநிதி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:35 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும், ராகுல்காந்தி வந்தபோது கண்கள் திறந்த நிலையில் வெளியான கருணாநிதியின் புகைப்படமும் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், சக்கர நாற்காலியில் அமரும் அளவுக்கு அவரது உடலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் ஒருபகுதியாக அவர் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்படுகிறார் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2 வாரங்களாக படுக்கையிலேயே இருந்த கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments