Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க முதல்ல ஜெயிச்சிட்டு பிறகு பேசுங்க – தமிழிசைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (10:49 IST)
தி.மு.கவின் வெற்றி நூல் இழையில் பெறப்பட்டதுதான் என்ற ரீதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதற்காக பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி.

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8414 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.

இதுகுறித்து பேசிய தமிழிசை “திமுகவினர் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.” என்று கூறியுள்ளார். மேலும் திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எம்.பி கனிமொழி “பாஜகவினர் முதலில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு பிறகு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும். திமுக-காங்கிரஸ் உறவு மிகவும் சுமூகமாகவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments