Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி உஷா குடும்பத்திற்கு கமல்ஹாசன் நிதியுதவி....

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (15:53 IST)
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

 
திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து  காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அப்போது உஷா கர்ப்பிணியாக இருந்தார் எனவும் தகவல் பரவியது.  
 
அந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றிருந்தார். அப்போது, உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்தார். உஷாவின் கணவர் ராஜாவிடம் அதற்கான காசோலையை கமல் கொடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments