Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (08:02 IST)
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புகளை இன்னும் கணக்கிடகூட முடியாத அளவுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர்களும், திரையுலகினர்களும் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நிவாரண உதவியை பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார்.

திருச்சியில் இருந்து முதல்கட்டமாக தஞ்சை செல்லும் கமல்ஹாசன், அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்டு அதன்பின்னர் கஜா பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார். முன்னதாக திருச்சியில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments