Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவை சீண்டிய கமல்ஹாசன்? ஒரே பேட்டியால் கொந்தளிப்பு

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (14:50 IST)
வாரிசு அரசியலை எல்லாம் நான் செய்யமாட்டேன் என கமல்ஹாசன் கூறியது திமுக மற்றும் தேமுதிகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் நிற்க உள்ளது.
 
அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடிந்துவிட்ட நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியாமல் இருக்கிறது.
 
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் எனக்கு பிறகு என் பதவிக்கு என் மகள்களோ, மைத்துனரோ வரமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. குடும்ப அரசியல் என்பது இருக்கக்கூடாது. அதேபோல் நான் தமிழன், தமிழை, தமிழ் மண்ணை காக்க எனக்கு ஓட்டுபோடுங்கள் என கூறுவதும் ஒரு வித குடும்ப அரசியல் தான்.
 
குடும்ப அரசியல் என்று கமல் ஸ்டாலினை கூறினாரா அல்லது விஜயகாந்தை சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் கமல் சீமானை வம்பிழுத்துள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments