Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரன் ஜூனியர் ராமச்சந்திரன் தேர்தலில் போட்டி??

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (13:03 IST)
அதிமுகவில் கடைசிவரை ஒரு தொண்டனாக இருப்பேன் என எம்ஜிஆர் பேரன் ஜூனியர் ராமச்சந்திரன் பேட்டி. 

 
சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
 
முன்னதாக அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் எம்.ஜி.ஆர்.ராமச்சந்திரன் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமானவை அளித்துள்ளேன். ஆலந்தூர், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் நான் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஒருக்காலும் தனித்து நிற்க மாட்டேன், அதிமுக தலைமை நிச்சயமாக எனக்கு வாய்ப்பு அளிக்கும். சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தனர். ஆனாலும் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன், கடைசி வரை அதிமுகவில் ஒரு தொண்டனாகவே நிலை நிற்பேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments