Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் வழக்கில் திடீரென விலகிய நீதிபதிகள்! காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (11:18 IST)
ஸ்டெர்லைட் வழக்கை விசாரணை செய்து கொண்டிருந்த அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் நீண்ட போராட்டம் நடத்தியதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஆண்டு மூடப்பட்டது இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைய மீண்டும் திறக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையின் நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. 
 
இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், நீதிபதி ஆஷா கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்தார். அவரை அடுத்து நீதிபதி ஆஷாவும் விலகுவதாக அறிவித்தார். 
 
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கை விசாரிக்கவில்லை என்று நீதிபதி சசிதரன் இந்த வழக்கில் இருந்து விலகியதற்கு காரணம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments