Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கர் கொலையை நியாயப்படுத்திய 2 பேருக்கு அடி உதை

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:34 IST)
உடுமலைப்பேட்டை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசிய 2 பேரை பொதுமக்கள் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் அடித்து உதைத்தனர்.

 
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உடுமலை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக 2 பேரை பொதுமக்கள் தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கக்கப்பட்டுள்ளனர். 
 
தாக்கப்பட்ட இருவரும் வழக்கு விசாரணையின் வாதத்தின் போது கொலையை நியாயப்படுத்தி பேசியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து மக்கள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் உள்ளதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments