Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கர் கொலையை நியாயப்படுத்திய 2 பேருக்கு அடி உதை

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:34 IST)
உடுமலைப்பேட்டை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசிய 2 பேரை பொதுமக்கள் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் அடித்து உதைத்தனர்.

 
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உடுமலை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக 2 பேரை பொதுமக்கள் தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கக்கப்பட்டுள்ளனர். 
 
தாக்கப்பட்ட இருவரும் வழக்கு விசாரணையின் வாதத்தின் போது கொலையை நியாயப்படுத்தி பேசியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து மக்கள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் உள்ளதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments