Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:21 IST)
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்று முதல் அவர் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தற்போது அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளும் விசாரணை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களை வழக்குகளை விரைந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து அவர் ஒரு சில மாதங்களில் தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், அமைச்சர் பொன் முடிக்கும் எதிரான தீர்ப்பு வந்த நிலையில் மேலும் 3 அமைச்சர்கள் மீதான வழக்குகளில் என்ன தீர்ப்பு வரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments