Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார்: அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி

ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார்: அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி

ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார்: அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (19:12 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை.


 
 
முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் பூரண குணமடைந்துவிட்டார் என கூறப்பட்டது.
 
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள ஜெயலலிதா எப்பொழுது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தே வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து சில தகவல்கள் பரவி வந்தது. அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகின.
 
இதனையடுத்து இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவர் வேகமாக குணமாகி வருகிறார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக வந்த செய்திகள் தவறானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் உடல் சிதைந்து வருகிறதா?: மருத்துவர் விளக்கம்