Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவால்தான் எனக்கு வாழ்க்கை : டீ கடை மணி உருக்கம்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (16:37 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டிற்கு அருகில் டீ கடை நடத்தி வரும் மணி என்பவர், ஜெ.வுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:


 

 
நான் அம்மாவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில், சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்து கொண்டிருப்பேன். அம்மாவின் வீட்டு வாசலில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு டீ விற்பனை செய்வேன். 
 
அப்போது அம்மாவிடம் உரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் டீ கடை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தார். அதன்பின் 2 முறை, மாநகராட்சி அதிகாரிகள் என் கடையை அகற்றுமாறு கூறினார்கள். ஒரு முறை நான் நேரில் சென்று அவரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பின் அங்கு கடை வைக்க அனுமதி அளித்தார்.
 
மற்றொரு முறை, அவரே என்னை நேரில் அழைத்து,  “என்ன மணி உன் கடை எங்கே?” என உரிமையுடன் விசாரித்தார். அகற்ற சொல்லிவிட்டார்கள் என்று நான் கூறியவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  அழைத்து என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டார். 
 
நான் வாழும் வாழ்வு அவர் தந்தது. அவர் தற்போது இல்லாதது எனக்கு மிகவும் துயரத்தைத் தருகிறது” என்று அவர் கூறினார்.

புகைப்பட உதவி - தினமலர்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments