Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்: தமிழிசை சௌந்தரராஜன்

Mahendran
திங்கள், 27 மே 2024 (14:04 IST)
ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும், ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 
கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என்றும், ஜெயலலிதாவை அதிமுகவினர் தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் என்றும், இன்று ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
 
மேலும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா என்றும், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.
 
ஏற்கனவே ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு ஜெயகுமார், சசிகலா உள்ளிட்டோர்  கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் அதே கருத்தை கூறியுள்ள நிலையில் அதிமுக தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments