3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் - வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள்..! அண்ணாமலை..!!

Senthil Velan
திங்கள், 27 மே 2024 (13:47 IST)
மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்றும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
 
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இந்த முறை நாம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் பாஜக இந்த முறை 60 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் இது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: அந்தரங்க புகைப்படங்களை காட்டி பாலியல் பலாத்காரம்.! இளம் பெண்களை சீரழித்த வாலிபர் கைது..!!
 
டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். எனவே, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜக வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்