Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிஷாவுக்கு சுற்றுலா சென்று வந்தார்: ஜெயக்குமார்..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (18:10 IST)
சமீபத்தில் ஒடிசாவில் ரயில் விபத்து என்ற துயர நிகழ்ச்சி நடந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட சென்று வந்தார் என்பதும் இது குறித்து அவர் முதலமைச்சர் இடம் விளக்கியதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ஒரிசா பயணத்தை சுற்றுலா சென்று வந்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது யாராவது கூலிங் கிளாஸ் போட்டு வருவார்களா? சூட்டிங் சென்ற மாதிரி அவர் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார் என்று கூறினார். மேலும் ஒரிசா சென்றவர்கள் சம்பவம் இடத்திற்கு செல்லவே இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்
 
பிரதமர் வருகையால் உதயநிதியை அனுமதிக்கவில்லை என்று கூறிய போது அதையெல்லாம் ஏற்க முடியாது, ஒரு முதலமைச்சரின் மகன் ஒரு மாநிலத்தின் அமைச்சரை தடுக்க யாராலும் முடியாது, இந்த பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் கூறினார். 
 
மேலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. அவர்களில் யாராவது தமிழர்கள் இருந்தார்களா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தமிழக அரசு ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments