Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

Siva
புதன், 29 மே 2024 (07:30 IST)
அரசியல்வாதிகளுடன் விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி என அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பதும் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’ஜெயலலிதா இந்துத்துவா தீவிரவாதி தான் என்றும் இதைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அதிமுகவினர் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் செய்யலாம் என்றும் சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’அரசியல்வாதியோடு விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்வது என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் அதிமுகவை பற்றி பேசி எங்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இப்படி பேசி வருகிறார் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments