Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்ரூவர் ஆகிறாரா ஜாபர் சாதிக்.. பரபரப்பு தகவல்..!

Siva
திங்கள், 29 ஜூலை 2024 (08:31 IST)
போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி காவலில் இருக்கும் ஜாபர் சாதிக் அப்ரூவர் ஆகிவிடலாமா என்று ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்த போது அவரது வங்கி கணக்குகளை மையப்படுத்தி பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் ஜாபரின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு நபர்களுக்கு கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்து தான் பல கேள்விகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜரான ஜாபர் சாதிக் மனைவி அமீனா மற்றும் அவரது தம்பி சலீம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நமக்கு மேலே இருப்பவர்களை காட்டிக் கொடுக்காவிட்டால் இந்த விவகாரத்தில் நமது குடும்பத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் எனவே அப்ரூவர் ஆகிவிடலாம் என்று ஜாபர் சாதிக், மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments