Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்: சென்னை ஐகோர்ட்டின் பரபரப்பு உத்தரவு..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:37 IST)
மருத்துவம் மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
எம்டி, எம்எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதியுள்ள 50 சதவீதம் இடங்களில் போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு முப்பது சதவீதம் ஊக்க மதிப்பெண் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் மருத்துவம் மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் அந்த  முடிவில் நீதிமன்ற தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. 
 
எனவே மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments